உடுமலை: உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாய்பாபா கோவிலில், ராம நவமியையொட்டி, கடந்த 15ம்தேதி சிறப்பு பூஜைகள் துவங்கியது. வரும், 25ம் தேதி வரை, காலை, 11:00 மணி முதல் 12:30 மணி வரை, ராமநாம சங்கீர்த்தனம், விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் சாய்சத்சரிதம் பாராயணமும் நடக்கிறது. விழாவையொட்டி, ஆனந்த சாயிபாபாவுக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. ராமநவமியையொட்டி, சீதாராம திருக்கல்யாணம் மற்றும் ரத உற்சவமும் நடக்கிறது.