சங்ககிரி: சங்ககிரியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற கோவில் கோபுர பணியானது, கலச விளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. சங்ககிரி, மத்தாளி காலனியில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்ற கோவில் கோபுர பணி, சக்தி ராமகிருஷ்ணன் தலைமையில், நேற்று காலை, 10:30 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. அதில், குரு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, குரு பீட செங்கல் எடுத்து, கோபுர திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், மன்ற உறுப்பினர்கள், பெண்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.