திருப்போரூர் : திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதம்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல, நேற்று பங்குனி மாத கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. சென்னை மற்றும் பல பகுதிகளில்இருந்து வந்திருந்த பக்தர்கள், கந்தபெருமானை வழிபட்டனர். விழாவையொட்டி, காலை, மாலையில், மாட வீதிகளில் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.