பழநி: பழநி பங்குனி உத்திர விழா துவங்குகிறது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் வசதிக்காக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பழநி பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச்: 24) முதல் ஏப்.,2 வரை நாட்கள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன், சப்பரம், வெள்ளிகாமதேனு, தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியில் உலா வருகிறார். மார்ச் 30ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கிரிவீதியில் தேரோட்டம் நடக் கிறது.சுவாமி திருவுலா மற்றும் தேரோட்டத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், கிரிவீதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்டன. சுற்றுச்சுவர்கள், கோயில்களில் வண்ணம் பூசப்பட்டது. மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.--