பதிவு செய்த நாள்
24
மார்
2018
11:03
மயிலாடுதுறை: சீர்காழியில், தமிழிசை மூவர் விழா (மார்ச் 23) துவங்கியது.நாகை மாவட்டம், சீர்காழியில் வாழ்ந்த தமிழிசை மூவர்களான, முத்து தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் ஆகியோர், தமிழ் கீர்த்தனைகளைப் பாடி தமிழிசையை வளர்த்தனர். இவர்களை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், சீர்காழியில் தமிழிசை மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும், அரசு சார்பில், மூன்று நாட்களுக்கு விழா நடத்தப்பட்டு வருகிறது. சீர்காழியில், தமிழிசை மூவர் விழா துவங்கியது.
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பிரமீளா குரு மூர்த்தி தலைமை தாங்கினார். தருமை ஆதீன இளைய சன்னிதானம், மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த சுவாமிகள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, பிரபல பாடகி மகதி, தமிழிசை கீர்த்தனைகளை பாடியும், இசைக் கலைஞர்கள் மங்கல இசையின் மூலம் தமிழிசை மூவர்களை ஆராதித்தனர். இந்த விழா நடக்கிறது.
அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், நேற்று நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட யாரும் பங்கேற்றாதது, தமிழிசை ஆர்வலர்க ளிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.