Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எண்ணம், சொல், செயலால் பிறருக்கு ... கோயில் கோபுரமும், விமானமும் ஒன்றா? கோயில் கோபுரமும், விமானமும் ஒன்றா?
முதல் பக்கம் » துளிகள்
சிவனை லிங்க ரூபமாக வழிபடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
சிவனை லிங்க ரூபமாக வழிபடுவது ஏன்?

பதிவு செய்த நாள்

05 ஏப்
2018
04:04

சிவனை ஏன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார் என்பதற்கு லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவிற்கும் மகா விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப்பெரிய அக்னி கோலமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதல் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் முதலாக லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலே தான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகக் கூறப்படுகின்றன. அவற்றில் சில ..

சுயம்பு லிங்கம்: தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.
தெய்வீக லிங்கம்: தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷியின மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.
அர்ஷ லிங்கம்: ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.
மனுஷ்ய லிங்கம்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இது பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. கீழே உள்ள சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும், மேல் பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகிறது.

க்ஷணிக லிங்கம்: தற்காலிக வழிபாட்டுக்கு மட்டும் பயன்படுத்துவது. முற்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம். இத்தகைய லிங்கங்கள் மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறு பெயர் பெறுகின்றன.

வர்த்தமானச லிங்கம்: வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப் போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானச லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்க வல்லது.

ஆத்ம லிங்கம்: இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும் இவை தவிர புண்டரீகம். விசாலா, ஸ்ரீவத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பேரும் புகழும். விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும். ஸ்ரீவத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ருமர்த்தனா அனைத்திலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம்.

 
மேலும் துளிகள் »
temple news
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி ... மேலும்
 
temple news
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி ... மேலும்
 
temple news
கடவுளின் அருள் பெறாத, எந்த சாம்ராஜ்யங்களும் இருக்க முடியாது. கதம்பர்களுக்கு மதுகேஸ்வரர், விஜயநகர ... மேலும்
 
temple news
ஒரு கோவிலில் மூலவருக்கு, மற்ற சன்னிதிகளுக்கு தலா ஒரு மணி இருக்கும். ஆனால் உத்தர கன்னடாவில் ... மேலும்
 
temple news
மைசூரு நகரை சுற்றி வந்தால், வீதிக்கு வீதி கோவில்களை காணலாம். இவை, வரலாற்று பின்னணி கொண்டவை. பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar