ஸ்ரீவில்லிபுத்துார் சந்தனமாரியம்மன் கோயில் பூக்குழி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 10:04
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரெங்கநாதபுரம் சந்தனமாரியம்மன் கோயிலில் இரண்டு ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கடந்த ஏப். 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய சந்தனமாரியம்மன் கோயில் விழாவில் 12 ஆம் நாளான நேற்று காலை 6:00 மணிக்கு மேல் கோயில் முன்பு பூ வளர்க்கபட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, 3:00 மணிக்கு பூக்குழி இறங்கினர். இரவில் அம்மன் வீதியுலா நடந்தது. டி.எஸ்.பி.ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் 12:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.