சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் கடலில் நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 10:04
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். நேற்று சித்திரை அமாவாசையை யொட்டி, தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள், முதலில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, கடலில் நீராடினர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார், கோயில் ஊழியர்கள் திணறியதால் 2 முதல் 6வது தீர்த்தம் வரை மூடினர். இதனால் பக்தர்கள் 17 தீர்த்தங்களில் மட்டும் நீராடி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். பின் கோயிலில் சுவாமி,அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.