பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
12:04
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாத பிற்பகுதியில் அதிக நன்மையை எதிர்பார்க்கலாம். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். செவ்வாய் மே1 முதலும், புதன் மே4 முதலும் சாதகமான இடத்துக்கு மாறுகின்றனர். ராசிக்கு 3-ம் இடத்தில் இருக்கும் கேது, 6-ம் இடத்தில் இருக்கும் சூரியன் மாதம் முழுவதும் நன்மையளிப்பர். சூரியனின் பலத்தால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் மேம்படும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். அக்கம்பக்கத்தினர்அனுசரணையுடன் இருப்பர். மே 3 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறு பாடு உருவாக வாய்ப்புண்டு.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குடும்ப பெரியோர்களின் ஆலோசனை உறுதுணையாக இருக்கும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்றசுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். மனதில் பக்தி உயர்வு மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கை கூடும். ஏப். 27,28ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் மே 9,10 ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு உண்டாகும் என்பதால் சற்று ஒதுங்கி இருக்கவும். மே 1,2,3ல்
பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறைவுஇருக்காது. குறுக்கிடும் தடைகளை தகர்த் தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால் புதிதாக எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டை விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் மே 3க்கு பிறகு வீடு திரும்புவர். ஏப்.17,18, மே 9,10,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஏப்.26,27ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மே1க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்கள் சூரியனால் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் புதன் மே 3 வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். வேலை நிமித்தமாக மனைவியை பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஏப்.25,26ல் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.
நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை ஏப்.21க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலன் காண்பர். மே1க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். ஏப்.14,15,மே 11,12,13ல் மனக் குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பின் தங்கிய நிலையில் இருந்து மே3 க்கு பிறகு விடுபடுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக காய்கறி, பழம், பயறுவகைகள் மூலம் அதிக லாபம் காண்பர். புதிய சொத்து வாங்க மே 1 வரை பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். பக்கத்து நிலம் வகையில் இருந்து வந்த தொல்லை மறையும். பெண்களுக்கு தோழிகள் அனுசரணைஉடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். மே 3க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் பெறுவர். மே 6,7,8ல் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம். ஏப். 18,19,20ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆனால், ஏப்.23,24ல் வயிறு பிரச்னை வரலாம்.
* நல்ல நாள்: ஏப்.16,17,18,19,20,25,26,27,28, மே1,2,3,6,7,8,14
* கவன நாள்: ஏப். 21,22 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்டம் எண்: 3,9 நிறம்: சிவப்பு, நீலம்
* பரிகாரம்:
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* அமாவாசையன்று அனுமனுக்கு அர்ச்சனை