பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
12:04
புதுப்பாக்கம்: புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று, பக்தர்கள் குவிந்தனர். கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், பழமையான மற்றும் புராதன கோவிலாக, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, மாதம் தோறும் அமாவாசை வழிபாடு நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம், விளம்பி வருட புத்தாண்டு விழா நடந்தது. அடுத்த நாளான நேற்று, அரசு விடுமுறையுடன், அமாவாசை நாள் என்பதால் ஆயிரக்காணக்கன பக்தர்கள் வழிபட வந்தனர். கூட்டு பிரார்த்தனையாக, ஆஞ்சநேயர் சன்னதி எதிரே, நுாற்றுக்கணக்கான பித்தளை மணிகளை கட்டினர். தனிநபர் பிரார்த்தனையாக, இளநீர் மட்டைகளை, ஸ்ரீராம ஜெய வாசகத்துடன் கோவில் பிரார்த்தனை மரங்களில் கட்டினர். அதே போல், திருப்போரூர் செங்கழனியம்மன் கோவில், நெல்லிகுப்பம் வேண்டவராசி அம்மன் கோவில் மற்றும் அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சுவாமி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் கூறுகையில், திருமண பாக்கியம், குழந்தை பேறு, வீடுகட்டுதல், மற்றும் மழை வளத்திற்காக பிரார்த்தனை பொருட்களை செலுத்துகிறோம் என்றனர்.