பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் சென்றனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், முக்கிய ஆன்மிக தலமாக திகழ்வதால், பல்வேறு பகுதிகளிலிருந்து கோவிலுக்கு, பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று அமாவாசை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதலே, பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; காலை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது; சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தது.மாவாசையை முன்னிட்டு ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அதேபோல், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி சுற்றுப் பகுதியிலுள்ள ஆறுகளில் பக்தர்கள் திதி கொடுத்தனர்.ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவை, உடுமலை, பொள்ளாச்சி உள்பட, பல பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.