ஊத்துக்காடு: வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவில் உள்ளது. 7ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பல வாகனங்களில், அம்மன் எழுந்தருளினார். பிரம்மோற்சவத்தின், 10வது நாளான நேற்று, காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினார். குளத்தை சுற்றி கூடியிருந்த பக்தர்கள், அம்மனை பக்தியுடன் வழிபட்டனர்.