பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில் 21 நாட்களில் ரூ. 2 கோடியே 7 லட்சத்து 24ஆயிரம் வசூலாகி உள்ளது. கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் 1015 கிராம், வெள்ளி 9 ஆயிரத்து 370 கிராம், வெளிநாட்டுக் கரன்சிகள் 229, ரொக்கம் ரூ. 2 கோடியே, 7 லட்சத்து 24ஆயிரத்து 489 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.