கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மன், உற்சவ மூர்த்தி, உள்புறப்பாடு சென்று, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் எல்லையம்மனை தரிசித்தனர்.