Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்மிடிப்பூண்டி எல்லையம்மன் ... கோவில்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் கோவில்களின் பாதுகாப்புக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சுனன் தபசு கோலாகலம்
எழுத்தின் அளவு:
அர்ச்சுனன் தபசு கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
12:04

ஆர்.கே.பேட்டை: யுத்த களத்தில் கவரவர்களை வெற்றி கொள்ள பாசுபத அஸ்திரம் அவசியம் என்பதை உணர்ந்த அர்ச்சுனன், அதை பெறுவதற்காக மேற்கொண்ட தபசு நிகழ்ச்சி, ஆர்.கே.பேட்டையில் நேற்று நடந்தது. ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்ச்சுனன் தபசு, நேற்று இரவு, நடந்தது.

கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனை மரத்தில் அமர்ந்து, அர்ச்சுனன் தபசு மேற்கொண்டார். இதற்காக, அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர், பக்தி சிரத்தையுடன் மேற்கொண்ட தவத்தின் போது, காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்களும் உடன், தவத்தில் ஈடுபட்டனர். இரவு, 7:00 மணியளவில், பக்தி பாடல்களை பாடியபடியே, மரத்தில் ஏற துவங்கிய அர்ச்சுனன், 8:00 மணியளவில், உச்சாணி கிளையை அடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தவ மேடையில் அமர்ந்து, கடும் தவத்தில் ஈடுபட்டார். தவத்தின் பயனாக, அவர் வேண்டிய பாசுபத அஸ்திரம் கிடைத்தது. அஸ்திரம் கிடைக்க பெற்ற அர்ச்சுனன், தன்னுடன் தவத்தில் இணைந்திருந்த பக்தர்களுக்கு, மலர்கள் மற்றும் பழங்களை பிரசாதமாக அள்ளி வீசினார். மரத்தடியில் காத்திருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அதை பெற முண்டியடித்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar