உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்திருக்கிறார் என்பதையே பகவானின் தசாவதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன..
மச்சாவதாரம்: நீரில் வசிக்கும் மீன், கூர்மம்: நீரிலும் நிலத்திலும் தென்படும் ஆமை. வராகம்: நிலத்தில் வசிக்கும் பன்றி. நரசிம்மம்: விலங்கு நிலையும் மனித நிலையும் கலந்தது. வாமனர்: குள்ள மனிதனாக இருந்து த்ரிவிக்ரமனாக விஸ்வரூபம் அடைந்தது உருவ வளர்ச்சியைக் குறிப்பது. பரசுராமர்: கோபம் கொண்ட மனித நிலை. பலராமர்: சாதாரண மனித நிலை. கிருஷ்ணன்: விளையாட்டும் வினையும் கலந்த மனிதத் தன்மை. ராமன்: பொறுமையுடன் விவேகம் நிறைந்த மனிதத் தன்மை. கல்கி: மனித நிலையைக் கடந்தது