இலங்கைப் போரில் ராவணனை நேருக்கு நேர் சந்திக்கும்போது முக்கியமானதொரு கருத்தை வலியுறுத்தினார் ராமன். “மனிதர்களில் மூவகை உண்டு. பூக்களை மட்டுமே கொடுக்கும் ரோஜா போன்றோர் முதல் வகை. பூக்களோடு பழங்களையும் தரும் மா போன்றோர் இரண்டாவது வகையினர். பழங்களை மட்டுமே தரக்கூடிய பலா போன்றோர் மூன்றாவது வகை. முதல் வகையினர் நிறையப் பேசுவார்கள்; செயல்பட மாட்டார்கள். இரண்டாவது வகையினர் சொல்லிலும் செயலிலும் வல்லவர். மூன்றாவது வகையினர் செயலில் மூலமே வலிமையைக் காட்டக்கூடியவர்கள். அவர்கள் எதையும் சொல்லிக் கொண்டு திரிவதில்லை. எனவே ராவணா, நீ சொல்லில் வீரத்தைக் காட்டாமல் செயலில் காட்டு” என்றார் ராமன்.