பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
06:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவம், பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாதம் வளர்பிறையில், ஆண்டுதோறும், வசந்த உற்சவ விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இன்று சித்திரை வளர்பிறையையொட்டி, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாலை, 4:30 மணிக்கு சம்பந்த விநாயகர் சன்னதியில், சிவாச்சாரியார் வேத மந்திரம் முழங்க, பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வரும், 29 வரை சித்திரை வசந்த உற்சவ விழா நடக்கும். இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், தினமும், 10 முறை, தல விருட்சமான மகிழமரத்தை சுற்றி, மேளதாளத்துடன், தேவாரம் பாடல் பாடி வலம் வருவர். அப்போது, சுவாமி மீது, அலங்கரிக்கப்பட்ட பொம்மை பூ கொட்டும் நிகழ்வு நடக்கும். வரும், 29ல், தீர்த்தவாரி மற்றும் மன்மத தகனம் நடக்கும்.