Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை ... பிளாஸ்டிக் இல்லா பெரிய கோவில் தஞ்சையில் திருநங்கை விழிப்புணர்வு பிளாஸ்டிக் இல்லா பெரிய கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமியன்று தி.மலையில் விரைவாக சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
சித்ரா பவுர்ணமியன்று தி.மலையில் விரைவாக சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
11:04

திருவண்ணாமலை,சித்ரா பவுர்ணமியன்று, அருணாசலேஸ்வரர் கோயிலில், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.சித்ரா பவுர்ணமிக்கு, திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் கந்தசாமி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருவண்ணாமலையில் வரும், 29 காலை, 6:58 முதல் மறுநாள் காலை, 6:52 வரை, சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேரம் உள்ளது.சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாம், என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் வசதி, 12 மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, மூன்று பேட்டரி கார் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கோயிலினுள், பக்தர்கள் வரிசையில் நிற்கும் பாதை அகலப்படுத்தி, விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மாவட்டம் முழுவதும், 2,900 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து, கிரிவலம் பாதைக்கு செல்ல, 40 இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. மலையேறவும், மலையை சுற்றிலும், கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.பவுர்ணமி தினத்தில், 14 ரயில்கள், திருவண்ணாமலை வழியாக செல்கிறது. இந்த ரயில்களின், காலநேரம் குறித்து, முன்கூட்டியே அறிவிக்கப்படும். 45 இடங்களில், விவசாய நிலங்களில் குளிக்கும் வசதியுடன் கூடிய, தற்காலிக இலவச பாத்ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar