பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
11:04
திருவாடானை, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தன. தேவஸ்தான கண்காணிப்பாளர் பரமேஸ்வரபாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.24ல் திருக்கல்யாணமும், 28 ல் காலை 9:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். விழா நாட்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, பூதம், அன்னவாகனம், வெள்ளி ரிஷப வாகனம், நந்தி, சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற பல வாகனங்களில் பாகம்பிரியாள் தாயார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 29ல் தீர்த்தவாரியும், அன்று இரவு பஷ்பபல்லக்கும், மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறும்.