பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
12:04
சின்னமனுார், சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 16ல் பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுடன் துவங்கியது. நேற்று வேத மந்திரங்கள் முழங்க மகாராஜ பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் கொடியேற்றினர். முன்னதாக தேன், மஞ்சள், இளநீர், தயிர் உள்ளிட்டவற்றால் கொடி பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, நகராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ், காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வாசிமலை, வர்த்தக சங்க தலைவர் சிவகாமிநாதன், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், அ.தி.மு.க., நகர துணைச்செயலாளர் ராஜேந்திரன், ஆனந்தம் பர்னிச்சர்ஸ் உரிமையாளர் மாரிச்சாமி , திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உபயதாரர்கள் மண்டகப்படி தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும். ஏப்., 27 ல் சிவகாமியம்மன்- பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்., 28 ல் காலை 11:00 மணிக்கு மேல் சுவாமி- அம்மன் தேரில் எழுந்தருளல், மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. கண்ணாடி கடை முக்கில் நிலை நிறுத்தப்படும் தேர், மறுநாள் நிலைக்கு வந்து சேரும். மே 7 ல் காவல் தெய்வம் விலங்கையாவிற்கு சிறப்பு அபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.