பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
02:04
கொடுமுடி: கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா வரும், 28ல், நடைபெற உள்ளது. நேற்று காலை, 9:30 மணிக்கு சிவன், பெருமாள் கோவில் சன்னதிக்கு முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மகுடேஸ்வரர் கோவிலிலும், பின்னர் வீரநாராயணப் பெருமாள் கோவிலிலும் கொடி ஏற்றப்பட்டது. இன்று முதல், 27 வரை தினமும் சிவன் மற்றும் பெருமாள் சுவாமிகள் பலவித வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. வரும், 29 மாலை, 6:30 மணிக்கு கொடியிறக்கம், 30ல் சிவன், பெருமாளுக்கு புஷ்ப பல்லக்கு, விடையாத்தி உற்சவம் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.