சின்னாளபட்டி, அம்பாத்துறை பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஜமீன் அழைப்பு, கொடிமரத்திற்கு விசஷே பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பூஜாரியை தொடர்ந்து, கிராம மக்கள் காப்புக்கட்டினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏப். 27-ல், அம்மன் கரகம் பாலித்தலுடன் திருவிழா துவங்கும். ஏப். 29 வரை, மாவிளக்கு, பொங்கல், அக்னிச்சட்டி, பால்குட நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்டவை நடக்க உள்ளன.