பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
11:04
திருவண்ணாமலை: வெயிலின் தாக்கத்தால், அருணாசலேஸ்வரர் கோவில், வளாகத்தின் தரை கொதிப்பதால், பேட்டரி காருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில், கடந்த, சில நாட்களாக, கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிகாலை, 5:00 மணி முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 3:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, கோவில் நடை திறந்திருக்கும். காலை, 9:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை, வெப்பத்தின் தாக்கதால், கோவில் வளாக தரை சூடேறி, கொதிப்பதால், நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், சிறுவர்களும், முதியவர்களும் பேட்டரி காரிலேயே, கோவில் வளாகத்தில் சுற்றி பார்க்க ஆர்வம் செலுத்துவதால், கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள, இரண்டு பேட்டரி காருக்கும், திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.