ஒரு சமயம் முகவ்கிஸ் எனும் எகிப்திய மன்னர், நபிகள் நாயகத்திற்கு பல பரிசுகளை அனுப்பி வைத்தார். அந்த பரிசுகளில் ஒன்றாக ஒரு மருத்துவரும் வந்தார். அந்த மருத்துவர் மதினாவிற்கு வந்து சில மாதங்கள் ஆகி விட்டபோதிலும், அவரிடம் ஒருவரும் வைத்தியம் பார்க்க வரவில்லை. தான் ஒரு அன்னியர் என்பதால் தன்னிடம் யாரும் வைத்தியம் பார்க்க வரவில்லையோ என அவர் வேதனைப்பட்டார். நாயகம் அந்த மருத்துவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி, “மருத்துவரே! நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள். அல்லாஹ்வின் அருளால் உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. ஏனெனில் திருக்குர்ஆனின் போதனைப்படி நாங்கள் பசித்த பின்னரே உண்போம். அதுவும் குறைத்தே உண்போம். ஆகவே நோய் எங்களிடம் அண்டுவதில்லை,” என்றார். நாயகம் இனிமையாக பேசியதால் மருத்துவர் மகிழ்ந்தார். “கோபத்திலே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவரே உங்களில் சிறந்த வீரராவார்” என்பது நாயகத்தின் பொன்மொழியாகும். பேச்சை அன்பால் நிரப்புங்கள். அனைத்து இதயங்களையும் நம் பக்கம் திருப்ப உறுதி கொள்வோம்.