வெள்ளிக்கிழமையில் மோதகம் படைத்து விநாயகரை வழிபட தடைகள் அகலும். விருப்பம் நிறைவேறும்.
என்ன தேவை புழுங்கலரிசி – 200 கிராம் தேங்காய் – 1/2 மூடி வெல்லம் – 150 கிராம் நெய் – 2 ஸ்பூன் உப்பு – 1/4 ஸ்பூன்
செய்வது எப்படி?
அரிசியை களைந்து வடித்து, நிழலில் உலர்த்தி அரைக்கவும். வறுத்து ஆற வைத்து சலித்துக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு கரைசல் தண்ணீரை ஊற்றி, உதிரும் பக்குவத்தில் பிசைந்து, பெரிய துவாரமுள்ள சல்லடையில் சலிக்கவும். பின், இந்த மாவை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். வெல்லத்தை தூள் செய்து கரைத்து கொள்ளவும். வேக வைத்த மாவுடன் வெல்ல கரைசல், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கிளறவும். இதை நீள உருண்டையாக செய்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைக்க மோதகம் ரெடி.