பதிவு செய்த நாள்
15
மே
2018
05:05
நேர்த்தியை பெரிதும் விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் கேதுவும்,செவ்வாயும் தொடர்ந்து நற்பலன் கொடுப்பர். 6-ம் இடத்தில் இருக்கும் புதன் மே 21 வரை சிறப்பான பலன் தர காத்திருக்கிறார். அதன் பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும், ஜூன் 6 முதல் சாதகமான இடத்துக்கு மாறுகிறார். சுக்கிரன் ஜூன் 10ல் கடகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். சூரியன், சனி, ராகு, குரு ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.
செவ்வாய்,கேது 3-ம் இடத்தில் உள்ளதால் மனதில் பக்தி
எண்ணம் மேம்படும். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகமுண்டாகும்.
குடும்பத்தில் சுக்கிரனால் ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். மாத முற்பகுதியில் புதனால் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப
நிகழ்ச்சிகள் நடந்தேறும். மே 21க்குப் பிறகு குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு ஏற்படலாம். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே. ஆனால் ஜூன் 6க்குப் பிறகு நிலைமை சீராகும். முயற்சிகளில் தடை விலகி வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு.
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்கள் அனுகூலமாக செயல்படுவர். குறிப்பாக ஜூன் 12,13ல்
அவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். மே 24,25ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன்5,6ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் அடைய வாய்ப்புண்டு. எதிரிகளால் பிரச்னை வரலாம்.
பொருட்களை களவு கொடுக்க நேரிடும். வீண் அலைச்சல்
ஏற்படலாம். அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியது இருக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். மே 26,27,28,31 ஜூன்1,2ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 15, ஜூன்10,11ல் அதிர்ஷ்டவசமாக எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும். மாத பிற்பகுதியில் வேலைப்பளு குறையும்.
பணியாளர்கள் மாத முற்பகுதியில் புதனால் பதவி உயர்வு
காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மே 21ல் இருந்து ஜூன் 6 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். ஆனால் அதன் பிறகு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர் உதவிகரமாக செயல்படுவர்.
விண்ணப்பித்த கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். மே 22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்கள் மாத தொடக்கத்தில் விருது, பாராட்டு கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் உயரும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் கல்வியில்சிறப்பு அடைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். மே 21 முதல் ஜூன் 6 வரை சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக பயறு வகைகள், காய்கறி பயிர்கள் நல்ல மகசூல் தரலாம். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டாகும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். தோழிகள் உதவிகரமாக இருப்பர்.
குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வர வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். மே29,30, ஜூன் 3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
* நல்ல நாள்: மே 15,16, 17,22,23,24,25,29,30, ஜூன் 3,4,10,11,12,13
* கவன நாள்: மே18,19, ஜூன் 14 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,3
* நிறம்: சிவப்பு, வெள்ளை
* பரிகாரம்:
● தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● ஞாயிறு ராகுகாலத்தில் காளிக்கு நெய் தீபம்
● சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை