பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த செயலிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆனாலும் உங்களின் தீவிர முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்காமல் போகாது. புதன் மே 21 வரையும், ஜூன் 6க்கு பிறகும் நற்பலனை வழங்கு வார்.
சுக்கிரனால் நண்பர்களின் உதவி கிடைக்கும். மே 15,16ல் பெரியோரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். செவ்வாய் உங்கள் ராசியில் இருந்து வீண்பகையும், விரோதமும் உருவாகலாம். குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காண்பீர்கள்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது.
மனதில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்னியோன்ய சூழ்நிலை உருவாகும். ஜூன் 3,4 ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். மே 29,30ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஜூன் 10,11ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 7,8,9ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். மே 21க்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். ஜூன் 6க்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச் சிகள் சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். மே21க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைக்க வேண்டாம். ஜூன் 6க்கு பிறகு நிலைமை சீராகும். வீண் விரயம் மறையும். மே 31, ஜூன் 1,2,5,6ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே18,19, ஜூன் 14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மே 21ல் இருந்து ஜூன் 6 வரை அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டிய திருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைப்பது அவசியம். மே 26,27,28 ஆகிய நாட்களில் சிறப்பான நன்மையைஎதிர்பார்க் கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூன் 10க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை எதிர்நோக்கலாம். ஜூன் 12,13ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குருவின் பார்வையால் கல்வி சிறப்பாக அமையும். பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நற்செயல்களில் ஈடுபடுவர்.
ஆசிரியர்களின் மத்தியில் நற் பெயர் உண்டாகும். ஜூன் 6 க்கு பிறகு போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு புன்செய் பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால், அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் அவ்வளவாக வருமானம் கிடைக்காது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற கால தாமதம் ஆகலாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. ஜூன் 7,8,9 ல் ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். மே 20,21ல் சிலருக்கு விருந்து, விழா என சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். பண வரவு இருக்கும்.
* நல்ல நாள்: மே 15,16,18, 19,20,21,26,27,28,29, ஜூன் 3,4,7,8,9,14 * கவன நாள்: மே 22,23 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 5,6 * நிறம்: பச்சை, நீலம்
* பரிகாரம்: ● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம் ● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை ● தேய்பிறை சதுர்த்திஅன்று விநாயகர் வழிபாடு
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »