பதிவு செய்த நாள்
16
மே
2018
10:05
பழநி: பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான, வைகாசி விசாகத் திருவிழா, வரும், 22 முதல், 31 வரை நடக்கிறது.விழாவையொட்டி, பெரியநாய கியம்மன் கோவிலில், வரும், 22ல் காலையில் கொடியேற்றம் நடக்கிறது. ஆறாம்நாள், 27ல் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளுகிறார்.முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம்நாள், 28ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோவில் சன்னதி அதிகாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோவில் நான்கு ரத வீதிகளில், மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.