புதுச்சேரி:லாஸ்பேட்டையில் 6 கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதிற்கான நிதி உதவியை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.லாஸ்பேட்டை தொகுதி வீரபத்திரசாமி சவுடாம் பிகை அம்மன் கோவிலில், நெசவாளர் நகர், சிவசக்தி வலம்புரி விநாயகர் கோவில், அசோக் நகர் செல்வ சக்தி விநாயகர், குறிஞ்சி நகர் கற்பக விநாகர், செல்வ விநாயகர் மற்றும் வலம்புரி ஞான விநாயகர் ஆகிய கோவில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்காக நிதி உதவி வழங்கப்பட்டது. தலா ரூ. 10 ஆயிரம் வீதம், 6 கோவில்களுக்கு ரூ. 60 ஆயிரம் நிதி உதவியை, இந்து அறநிலை யத்துறை மூலம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அறங்கா வலர் குழுவினரிடம் வழங்கினார். பின்னர் மோர்பந்தல் திறந்து பொதுமக்களுக்கு மோர் வழங்கினார்.