பழநி அடிவாரம் பாதவிநாயகர்கோயில், சன்னதி வீதியில் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகள் அதிகரி ப்பால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோடை விடுமுறை காரணமாக பழநிமுருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
மலைக்கோயிலுக்கு செல்லும் பிரதான வழியான சன்னதிவீதியில் இருபுறங்களையும் ஆக்கி ரமித்து ஏராளமான தள்ளுவண்டி, தரைக்கடைகள் வைத்துள்ளனர். நேற்று(மே 15)ல் மாதபிறப்பு, கார்த்திகையை முன்னிட்டு காவடிகள், பால்குடங்களுடன் குவிந்த பக்தர்கள் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.
மேலும் கிரிவீதியில் தடையை மீறி வாகனங்கள் செல்வதாலும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சன்னதிவீதி, பாதவிநாயகர்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, கோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.