பதிவு செய்த நாள்
16
மே
2018
11:05
தஞ்சாவூர்: விழுப்புரம் மாவட்டம், வீரசோழபுரம் சிவன் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஐந்து ஐம்பொன் சுவாமி சிலைகளை மீட்க வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரினை அடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து ள்ளனர்.இது குறித்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அளித்த புகாரில் கூறியதாவது:தன் தந்தை ராஜராஜ சோழனின் அஸ்தியை கரைப்பதற்காக ராஜேந்திர சோழன் கொண்டு சென்றபோது, அஸ்தி மல்லிகைப்பூவாக மாறியது. இதையடுத்து, அந்த ஊரில் ராஜேந்திரனசோழன், நாரீஸ்வரர் என்ற சிவன்கோவிலை கட்டினார். அதன்பின் தான் இந்த ஊருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் வந்தது. இந்த ஊர், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ளது. இந்த சிவால யத்தில், 4 அடி உயரமுள்ள உற்சவ திருபுரந்தார், திரிபுரசுந்தரி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய ஐம்பொன் சிலைகள் சோழர் காலத்தில் நிறுவப்பட்டது.இந்த சிலைகள், 30 ஆண்டுகளு க்கு முன், இக்கோவிலில் இருந்து மாயமாகியது. இந்த சிலைகளை, இந்து சமய அறநிலை யத்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள் பல கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டனர். சிலைகள் மாயமாகியது தொடர்பாக கோவில் அப்போதைய அர்ச்சகர், அதிகாரிகளிடம் கூறியும், அற நிலையத் துறை அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஏதும் அளிக்காமல் வேண்டும் என்றே தவிர்த்துவிட்டனர்.எனவே, காணாமல் போன ஐம்பொன் சிலைகளை கண்டுபிடித்து, மீண்டும் அந்த சிலைகளை கோவிலின் வழிபாட்டுக்கு வழங்க வேண்டும். இந்த சிலைகளை திருடியவர்கள் மீது உரிய குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டி ருந்தது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த ஆவணங்களை, சிலைகள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ( மே 15)ல் தாக்கல் செய்தனர்.