Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
செஞ்சி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

16 மே
2018
06:05

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி மாத அமாவாசையை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத ஊஞ்சல் உற்சவம் நேற்று (மே 15)ல்  இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஜோதி ஏற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.  

ஊஞ்சல் தாலாட்டில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி உட்பட லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர், விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar