நபிகள் நாயகம், ரமலான் மாதத்தை, கண்ணியம் நிறைந்த, அருள்வளம் நிறைந்த மாதம் என்கிறார். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இந்த மாதத்தில் தான் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் மகத்தான இரவு வருகிறது. ‘நாம் இதனை, தெளிவான வேதத்தினை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம்’ என்று ஏக இறைவனான அல்லாஹ், புனித வேதமான குர்ஆன் அருளப்பட்ட நாள் குறித்து சொல்கிறான். நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான். இந்த புனித மாதத்தில், இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பசி தாங்கி நோன்பிருக்க வேண்டும். ‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’. ஆம்...பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம். இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். எனவே ஆனந்தமாக நோன்பு துவங்குவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:38 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி.