பதிவு செய்த நாள்
17
மே
2018
01:05
பெருந்துறை: காஞ்சிக்கோவில், சீதேவி அம்மன் கோவில் தேர்த்திருவிழா, நேற்று, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவிலில், பிரசித்தி வாய்ந்த சீதேவிஅம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், வைகாசி மாதம், கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு வரும், 31ல் குண்டம் திருவிழா, ஜூன், 1ல் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான விழா, நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும், 25ல், கொடியேற்று விழா நடைபெறுகிறது.