திருநெல்வேலி மாவட்டத்தில், ஆழ்வார் குறிச்சிக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அத்ரி மலைக்கோயில். இத்தல இறைவன் அத்ரி பரமேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள ருத்ர விநாயகர் சன்னதிக்குப் பின்னால் நீண்டு உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அம்ருதவர்ஷினி என்ற மரம். சித்திரை மாதம் முழுவதும் பன்னீர்துளிகளாக இம்மரத்திலிருந்து நீர் தெறித்து விழும் அற்புதம் நிகழ்கிறது.