தஞ்சாவூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரிலுள்ள கார்கோடேஸ்வரர் கோயில், கடகராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக விளங்குகிறது. ரதிதேவிக்கு சிவபெருமான், மாங்கல்ய பாக்கியத்தை இங்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது. எனவே இங்கு வந்து இறைவன் கார்கோடேஸ்வரரையும், இறைவி காமரசவ்லியையும் வேண்டிக்கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும் என்கிறார்கள்.