மத்தியப் பிரதேசம் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள உஜ்ஜையின் நகரம் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கு அருள் பாலிக்கும் மஹாகாளேஸ்வர் ஜோதிர் லிங்கத்துக்கு ஷோடச (16 வகை) அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. இவை தவிர, சில வேளைகளில் சில சிறப்பு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுவது உண்டு. சமீபத்தில் ஜோதிர் லிங்கத்தின் மீது ஈசனின் அம்சமான அனுமனின் பஞ்சமுகத் தோற்றங்கள் அனுமன், நரசிம்ம, கருடன், வராஹம், ஹயக்ரீவம் ஆகிய உருவங்கள் வெகு நேர்த்தியாக வரைந்து அலங்கரித்து வைக்கப்பட்டது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.