விழுப்புரம் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற பரிக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். இதன் உள்பிராகாரத்தில் வடமேற்குப் புறத்தில் கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றனர் வீர ஆஞ்சநேயர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் இந்த சன்னிதியின் முன்பாக நெல் பரப்பி அதன் மீது அவரவர் நியாயமான பிரார்த்தனைகளை எழுதி வைத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.