உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயில் அதிசயமானது. இந்த கோயிலில் மழைகாலம் தொடங்குவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பாக கோயிலின் உட்புறத்தில் மழை பெய்யத் தொடங்குகிறது. இந்த மழை தொடர்ந்து ஒரு வாரம் இடை விடாமல் பெய்கிறது. வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோயிலின் உட்புறத்தில் பெய்யும் மழையானது நின்று விடுகிறது. இந்த அதிசயம் வருடந்தோறும் நடைபெறுகிறது. ஆனால், இதற்கான காரணத்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.