பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, கோவில் நட்டுவைத்த கம்பத்திற்கு பக்தர்கள் பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். வரும், 30ல் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன், 10 வரை நடக்கிறது. இதில், முக்கிய நிகழ்வான, கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும், 30ல் நடக்கிறது. அன்று மாவட்டத்தில் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன், 2 சனிக்கிழமையன்று, அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.