பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில், பிரம்மோற்சவ விழா நாளை 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வானூர் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை (19ம் தேதி) காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக இன்று 18ம் தேதி காலை மகா கணபதி மற்றும் வர்ணமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, விநாயகர் உள்புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 7:00 மணிக்கு அபிஷேகம், சந்திரசேகரர் உள்புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மூலவர் அபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, தினசரி இரவு 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனம், புன்னை மர வாகனம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 27ம் தேதி 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும் நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, 29ம் தேதி மாலை 7:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், 31ம் தேதி மாலை 7:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் செல்வராசு, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள், பொது மக்கள் செய்து வருகின்றனர்.