பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
கலசப்பாக்கம்: கலசபாக்கம் அடுத்த, எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில், மூன்றாவது முறையாக உண்டியல் காணிக்கை திருடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் பகுதியில், பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், கோவில் உண்டியலை உடைத்த மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, முகமூடியுடன் கொள்ளையர்கள் வந்தது, தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றனர். ஏற்கனவே கண்காணிப்பு காமிராவில் பதிவானதால், முன்னெச்சரிக்கையாக கேமராவின் ஒயர்களை துண்டித்துள்ளனர். இதுகுறித்து, கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த, சில மாதங்களில், மூன்றாவது முறையாக உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருட்டு போனது, குறிப்பிடத்தக்கது.