பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
திருத்தணி : மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம், மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பிற்பகல், 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகாலம் என்பதால், திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.இதே போல், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மாள் கோவிலில், திரளான பெண்கள், குடும்பத்துடன் வந்திருந்து மூலவரை தரிசித்தனர்.