பதிவு செய்த நாள்
18
மே
2018
01:05
ஆர்.கே.பேட்டை : வியாழக்கிழமையை ஒட்டி, சாய்பாபா கோவில்களில் நேற்று, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் தரிசித்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவிலில், நித்ய பூஜைகளுடன், வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. சுந்தரராஜபுரம், மோசூர், சந்திரவிலாசபுரம் மற்றும் அம்மையார்குப்பத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதே போல், பத்மாபரம், சாய்பாபா கோவிலிலும், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் தரிசனம் நடந்தது.