மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு அபிஷேகம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2018 01:05
கரூர்: வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, பக்தர்கள் பால் மற்றும் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். கரூர், ஜவஹர் பஜாரிலுள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த, 13 அன்று பாலம்மாள்புரத்திலிருந்து கோவிலுக்கு கம்பம் எடுத்து வரப்பட்டது. அமராவதி ஆற்றில் கம்பத்தை வைத்து, பூஜை செய்யப்பட்டு, கோவிலுக்கு எடுத்து வந்து நட்டு வைக்கப்பட்டது. கம்பத்திற்கு, தினமும் பக்தர்கள் பால், மஞ்சள் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வழிபட்டு வருகின்றனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.