* உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக ஏழைக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சிய ளிக்கும். * கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்கிறார். அவரை விட கருணை மிக்கவர் யாருமில்லை. * விரதத்திற்காக பட்டினி கிடப்பதை விட, உயிர்களை கொல்லாது இருப்பது மேலானது. * கடவுளின் பெயரால் உயிர்ப்பலி செய்வது கூடாது. * எல்லா உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள். * மனஒருமையுடன் கடவுளின் திருவடியை நினைக்கும் நல்லவர் களுடன் நட்பு கொள்ளுங்கள். * உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரோடு சேராதிரு ங்கள். * நல்லெண்ணத்தால் மனதை கனியச் செய்யுங்கள். * ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல். * கோள் சொல்லிக் குடும்பத்தை கலைக்காதீர்கள். * பிறர் குற்றங்களை கவனிக்காமல் இருந்தாலே மனதிலுள்ள தீயஎண்ணம் மறையும். * இயற்கையை மாற்றும் தெய்வீக சக்தி நமக்குள் இருக்கிறது. – வழிகாட்டுகிறார் வள்ளலார்