பதிவு செய்த நாள்
21
மே
2018
10:05
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில்,சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநாயகர் உற்சவமும்,14ம் தேதி முதல் 16ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும்,18ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் 19ம் தேதி செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும்,நேற்று வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் செண்பதியாகராஜர் எழுந்தருளினார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று 21ம் தேதி பூத வாகனத்திலும்,22ம் தேதி யானை வாகனத்திலும்,23ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 25ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.26ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 27ம் தேதி தெப்ப உற்சவமும், 29ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா தலைமையிலான பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது.