சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி கோயில் விநாயகர் சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 20 ம் தேதி விநாயகர் மீண்டும் கோயிலுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா தொடங்கியது. காலை 10:00 மணிக்கு சந்திவீரன் கூடத்திலிருந்து புறப்பட்ட விநாயகர் 12:00 மணிக்கு கோயிலை வந்தடைந்தார்.மதியம் 1:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டது. 2.00 மணிக்கு பிடாரியம்மன் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்மனுக்கு காப்புக்கட்டப்பட்டது. 2:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் ஓலைச்சுவடி படித்தனர். பின்னர் தங்க கொடிமரத்தில் சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.மே 24 ல் திருக்கல்யாண உற்ஸவமும், 25ல் கழுவன் திருவிழாவும் நடைபெறும். 28 ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாட்டார்களும் சிவகங்கை தேவஸ்தானத்தினரும் செய்து வருகின்றனர்.