பாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2018 11:05
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை அதிகார நந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு தெருவடைச்சான் உற்சவம், 26ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு தேரோட்டம், 29ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் நடக்கிறது. 31ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடக்கிறது.பண்ருட்டிதிருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு திரிபுரசம்ஹாரமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் சரநாராயண பெருமாள் கருடவாகனத்தில் முப்புரம் எரித்த காட்சி ஐதீக முறைப்படி நடக்கிறது.